Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

உலக நாயகனோடு சம்பவம் செய்ய போகும் விக்னேஷ் சிவன்.. மயிலு மகளை தூக்கிவிடும் கமல்

உலக நாயகனோடு சம்பவம் செய்ய போகும் விக்னேஷ் சிவன்.. மயிலு மகளை தூக்கிவிடும் கமல்

அடுத்த படத்தில் விக்னேஷ் சிவனுடன் தரமான சம்பவத்தை செய்யப்போகும் உலக நாயகன். 

Actor Kamal Next Project: கமல் எந்த அளவிற்கு அமைதியாக மார்க்கெட் இல்லாமல் இருந்தாரோ தற்பொழுது  படங்கள் நடிப்பது தயாரிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். சிம்பு,  சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் தன் படத்திற்கு விக்னேஷ் சிவனை இயக்குனராக களம் இறக்குகிறார்.

இதில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார் நாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க திட்டம் போட்டுள்ளார் கமல்.ஏற்கனவே ஸ்ரீதேவியுடன் 80களில் இருந்து ஜோடி போட்ட கமல் தமிழ் சினிமாவிற்கு அவருடைய மகளை கொண்டு வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்.

ஜான்விகபூரும் ஹிந்தியில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் சோசியல் மீடியாவில் தற்போது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடிக்கிறார். இவரை தமிழ் சினிமாவில் பார்ப்பதற்கும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் காமெடி கலந்த லவ் ஸ்டோரியில் தயாராக போகிறது. அதாவது மொபைல் போனில் டைம் டிராவலிங் செய்வதை பற்றிய படம் எடுக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

எனவே பல முன்னணி பிரபலங்கள் இணைந்த இந்த டீம் விரைவில் சேரப் போகிறது என்றதுமே பரபரப்பாக பேசப்படுகிறது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளிவரும். முதலில் ஏகே 62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு தான் கிடைத்தது ஆனால் கதையில் ஏற்பட்ட குளறுபடியால் அது இப்போது மகிழ்திருமேனி கைவசம் சென்று விட்டது.

இருப்பினும் அஜித்தை வைத்து இயக்கப் போகிறோம் என்ற  ஆசையில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு கடைசியில் தோசையை வாயில் வைத்து விட்ட அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்பதற்காகவே விக்னேஷ் சிவன் இந்த  படத்தில் தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.