ஆண்டவருக்கு இதெல்லாம் அல்வா மாதிரி.. பட ரிலீஸ் சமயத்தில் கமல் சந்தித்த 6 சர்ச்சைகள்!

Kamal Haasan: கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை ரிலீஸ் செய்யும் விடமாட்டோம் என கர்நாடகா மாநிலத்தில் குரல் எழுந்து வருகிறது. ஆனால் கமல் அசால்டாக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று சொல்லி விடுகிறார்.

என்ன இவர் இவ்வளவு பெரிய பிரச்சனையை இப்படி டீல் பண்ணுகிறார் என்று தோன்றலாம். இதற்கெல்லாம் காரணம் முன் அனுபவம் தான். கமல் இதுவரை தன்னுடைய பட ரிலீஸ் சமயத்தில் சந்தித்த ஆறு சர்ச்சைகளை பற்றி பார்க்கலாம்.

கமல் சந்தித்த 6 சர்ச்சைகள்!

விருமாண்டி: விருமாண்டி படத்திற்கு முதலில் சண்டியர் என பெயர் வைக்கப்பட்டது. சண்டியர் என்றால் ரவுடித்தனம் பண்ணி சண்டை போடுபவர் என்று அர்த்தம். இந்த தலைப்பை வைக்க கூடாது என குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இருந்து கமலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

சண்டியர் என்ற பெயரை விருமாண்டி என மாற்றுகிறேன் என கமல் ஒரு வீடியோ வெளியிட்டார். மொத்த சர்க்காசமும் அந்த வீடியோவில் அடங்கி இருக்கும். இன்றுவரை யூட்யூபில் சண்டியர் சர்ச்சை என தேடினால் கமலின் ஒரிஜினல் தக் லைப்பான அந்த வீடியோ கிடைக்கும்.

விஸ்வரூபம்: இந்த நாடே வேண்டாம், நான் நாட்டை விட்டே வெளியேறுகிறேன் என கமல் மனம் குமுறி சொன்ன சம்பவம் விஸ்வரூபம் பட சமயத்தில் தான் நடந்தது.

குறிப்பிட்ட சமூகத்தினரை தொடர்ந்து தீவிரவாதியாக சித்தரிக்கிறார் என கமலுக்கு அப்போது பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. படத்தை ரிலீஸ் செய்யும் தியேட்டர்களுக்கு குண்டு வைப்போம் என மிரட்டல் கூட போனது.

ஹேராம்: கமலஹாசனின் ஹேராம் படம் முக்கிய மதத்தினர் இடையேயும், அரசியல்வாதிகளிடையும் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அகிம்சை, காந்தியவாதம் என மக்களின் சென்டிமென்ட்களை மொத்தமாக அடித்து நொறுக்கும் விதமாக அந்த படம் இருந்தது. இறுதியாக கமல் படத்தை படமாக பாருங்கள் என்று சொல்லி முடித்து விட்டார்.

தசாவதாரம்: கமல் ஒரு கெட்டப் போட்ட நடித்த படங்களுக்கே விமர்சனம் வருகிறது என்றால், 10 கெட்டப்பில் வந்த தசாவதாரம் தப்பித்து இருக்க முடியுமா.

படத்தின் ஆரம்பத்தில் வரும் விஷ்ணு- பெருமாள் சண்டை, கிளைமாக்ஸ் காட்சிகள் என அத்தனையும் இந்து மதத்தை புண்படுத்துவதாக எதிர்ப்புகள் எழுந்தது.

பாபநாசம்: கமலஹாசனின் சர்ச்சை வரலாற்றில் பாபநாசம் பட சர்ச்சை ஒரு வித்தியாசமானது. அதாவது இந்த படம் மலையாள படமான திருஷ்யம் படத்தின் ரீமேக்.

அப்படி இருந்த போதும் குறிப்பிட்ட நாவலின் கதையை எடுத்திருக்கிறார் என அப்போது பெரிய அளவில் பிரச்சினை செய்யப்பட்டது.