BB7 Kamal

ஒன்னுல்ல, ரெண்டு இல்ல 5 வைல்டு கார்டு என்ட்ரி.. இந்த ரெண்டு பேர் எவிக்சன் உறுதி

BB7 Wild Card Entry: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது வாரத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இப்போது பிக் பாஸ் ஆகிவிட்டார். வீட்டை இரண்டாக பிரித்து வைத்து கொளுத்தி போட்டதோடு, தற்போது ஓபன் நாமினேஷன் வைத்து அதில் பெட்ரோலையும் ஊற்றி விட்டார். இப்போது வீடு பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.

மற்ற சீசன்களில் எல்லாம் இல்லாத அளவுக்கு இந்த சீசன் எப்போதுமே காட்டுக் கூச்சலாக தான் இருக்கிறது. ஆகாதவன் பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம், கால் பட்டாலும் குத்தம் என்று ஆகிவிட்டது. சுவாரஸ்யம் இல்லாதவர்கள் என்று ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு இரண்டு வீட்டிற்கும் நடுவில் நடக்கும் பஞ்சாயத்தே நாள் முழுவதும் சரியாக இருக்கிறது.

இந்த வாரம் திங்கட்கிழமையே சூடு பிடித்து இருக்கிறது. கிளீனிங் டாஸ்க்கில் மணி மற்றும் விஷ்ணு மோதிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போட்டியின் நடுவராக இருந்த கேப்டன் பூர்ணிமாவை ஸ்மால் பாஸ் வீட்டினர் வறுத்து எடுத்து விட்டனர். சண்டை பெருசாகி கடைசியில் விஷ்ணுவுக்கும், பிரதீப்புக்கும் இடையே முட்டிக்கொண்டது.

போதாத குறைக்கு வாரத்தின் முதல் நாள் நாள் ப்ரோமோவில் கமலஹாசன் வந்து மற்றொரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இதுவரைக்கும் பிக் பாஸ் சீசன்களில் 2 வைல்டு கார்டு என்ட்ரி தான் இருக்கும். ஆனால் இந்த முறை பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இருப்பதால் இந்த முறை ஐந்து பேர் வர இருக்கிறார்கள். அதுவும் வரும் சனிக்கிழமை 8 மணிக்கு ஒரே நேரத்தில் வருகிறார்கள்.

கடந்த வாரம் போல இந்த வாரமும் 11 பேர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, கூல் சுரேஷ், மணி, மாயா, விஷ்ணு, வினுஷா, அக்ஷயா, நிக்சன், யுகேந்திரன், சரவண விக்ரம் ஆகியோர்தான் நாமினேட் செய்யப்பட்டு இருப்பது. வீட்டில் இந்த லிஸ்டில் பிரதீப் வெளியேற வாய்ப்பே இல்லை. அதேபோன்று மாயா இல்லை என்றால் அந்த வீட்டில் கண்டன்ட் இல்லை என்று ஆகிவிட்டது.

வைல்ட் கார்டு என்ட்ரி ஆக ஐந்து பேர் வர இருப்பதால் பிக் பாஸ் வீட்டில் வரும் வாரம் டபுள் எவிக்சன் நடைபெற இருக்கிறது. வினுஷா மற்றும் அக்ஷயா தான் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. பார்வையாளர்கள் சிலர் சரவண விக்ரம் வீட்டில் இருப்பது போல தெரியவே இல்லை. இதற்கு அவர் எலிமினேஷன் ஆகி பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிராக நடித்த குமரன் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

BB7

மீண்டும் கலவரமான பிக் பாஸ் வீடு.. சைக்கோவுடன் முட்டி மோதிய விஷ்ணு, அடுத்த ரெட் கார்டு ரெடி

Bigg Boss Season 7 Promo: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் போய்க்கொண்டிருக்கிறது. சும்மா எல்லாரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்களே எப்போது தான் டாஸ்க் செய்வார்கள் என்று பார்வையாளர்கள் கடந்த வாரம் வரை கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இனி எங்களிடம் டாஸ்கே எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லும் அளவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் நடைபெற்றது.

இதன் விளைவாக கமலஹாசன் நேற்று, போட்டி கைகலப்பாக மாறும் பொழுது அதை உடனே நிறுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தார். மேலும் விஜய் வர்மா நேற்று வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் ஆக பூர்ணிமா தேர்வாகி இருக்கிறார். போதாத குறைக்கு இன்று ஓபன் நாமினேஷன் வேறு நடைபெற்று இருக்கிறது.

இந்த வாரத்தின் தலைவர் பூர்ணிமாவை அதிகம் வறாதவர்கள் என்ற லிஸ்டில் பிரதீப், நிக்ஸன், மணி, யுகேந்திரன், அனன்யா,ஜோவிகா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வீட்டின் கிளீனிங் வேலையை செய்வதற்காக டாஸ்க் வைக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டின் சார்பாக விஷ்ணுவும், ஸ்மால் பாஸ் வீட்டின் சார்பாக மணியும் கலந்து கொண்டார்கள்.

சேரில் உட்கார்ந்து கொண்டு கால்பந்து விளையாடி அதிகம் கோல் சேர்ப்பவர்கள் தான் வின்னர் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பிக் பாஸ் வீட்டை சேர்ந்த விஷ்ணு வெற்றி பெற்றார். இதனால் டென்ஷன் ஆன நிக்சன் நடுவராக இருந்த பூர்ணிமாவை எதிர்த்து கேள்வி கேட்டதோடு ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் கேப்டன் டவுன் என கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சலசலப்பில் திடீரென விஷ்ணு விஜய் மற்றும் பிரதீப் ஆண்டனிக்கு இடையே மோதலாகிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கத்த ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே முதல் வாரத்தில் பிரதீப்பிடம் தவறுதலாக பேசிய விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் கார்டு கொடுக்கப்பட்டது தான் இந்த ப்ரோமோ வீடியோவை பார்க்கும் பொழுது நினைவுக்கு வருகிறது.

மேலும் இந்த வாரத்தின் ஓபன் நாமினேஷனில் பிரதீப், மணி மற்றும் மாயா அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே மணி மற்றும் ரவீனாவை வேறு வேறு வீட்டில் பிரித்துப் போட்டது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த இருவரில் ஒருவர் இந்த வாரம் நன்றாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

BB7 22nd day

ஓபன் நாமினேஷனில் சிக்கிய 3 போட்டியாளர்கள்.. தாய்க்கிழவியா, சைக்கோவா காலி செய்யப் போகும் பிக்பாஸ்

BB7 Open Nomination: கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் 22 நாட்களை கடந்து இருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் உக்கிரமாக நடந்து கொண்டதன் காரணமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து திங்கட்கிழமை ஆன இன்று நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்பது போல் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எல்லோரும் பிக் பாஸ் தூண்டி விடுவதற்கு முன்பே அவர்களே சண்டை போட்டு கண்டன்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வீடுகள் என்று ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சை இன்று போர்க்களமாகவே மாறிவிட்டது. இதில் ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் பிக் பாஸ்.

எப்போதுமே மற்ற சீசன்களில் எபிசோடுகளை கடந்த பிறகு தான் ஓபன் நாமினேஷன் நடத்தப்படும். ஆனால் இந்த சீசனில் நான்காவது வாரமே ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டு இருக்கிறது. பிக் பாஸ் இதை அறிவிப்பதற்கு முன்னரே போட்டியாளர்கள் யார் யாரை நாமினேட் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஐஷு, பிரதீப் ஆண்டனியை நாமினேட் செய்வது சுத்த வேஸ்ட் என சொல்லி இருக்கிறார்.

ஐஷு சொன்னது போல் இனி வரும் வாரங்களில் எத்தனை தடவை பிரதீப்பை டாமினேட் செய்யப்பட்டாலும் கண்டிப்பாக அவர் சேவ் ஆகிவிடுவார். பிரதீப் ஒவ்வொரு முறையும் சேவ் ஆகும்பொழுது மூன்றாவது சீசனில் கவின் சேவ் ஆகி வந்தது தான் ஞாபகம் வருகிறது பார்வையாளர்களுக்கு. இருந்தாலும் மனம் தளராது விசித்ரா மற்றும் வினுஷா போன்றவர்கள் இன்றைய ஓபன் நாமினேஷனில் பிரதீப்பை நாமினேட் செய்திருக்கிறார்கள்.

டான்ஸ் மாஸ்டர் மணி இன்று அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அதிலும் ஐஷு மணியை நாமினேட் செய்யும் போது மணி பார்வையாளர்களை என்டர்டைன் செய்வது போல் தெரியவில்லை, அவர் ரவீனாவை என்டர்டைன் செய்வதில் தான் ஆர்வமாக இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.இதற்கு நிறைய பேர் அதுதான் உண்மை என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் ஐஷுவுக்கு மணி மீது இருக்கும் காண்டு தான் இப்படி சொல்லி இருக்கிறார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கடந்த மூன்று வாரங்களாக ஏதோ ஒரு காரணங்களால் மாயா மீண்டும் மீண்டும் தப்பித்து வருகிறார். சளைக்காது போட்டியாளர்களும் அவரை நாமினேட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த வாரத்திலும் மாயா அதிகப்போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். யுகேந்திரன் மாயா எப்போதுமே மாயையாக இருக்கிறார் என்று சொல்லி நாமினேட் செய்திருக்கிறார்.

BB7 promo

விஜய் வர்மாவை ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்.. அப்போ ரெட் கார்டு கன்ஃபார்ம் தான் போல

BB 7 Red Card: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் இந்த வாரம் 11 பேர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இதில் யார் வெளியே போவார் என்பது தான் இந்த வாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த முறை ஆரம்பத்திலேயே கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ். இரண்டு வீடுகள் அமைத்து சுவாரசியம் இல்லாதவர்களை அந்த வாரத்தின் தலைவர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ரூல்ஸ் சொன்னதிலிருந்து மொத்த பிரச்சனையும் பற்றி கொண்டு விட்டது. ஆரம்பித்த 20 நாட்களிலும் சண்டை மற்றும் சச்சரவு தான் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இதுவரை கடினமான டாஸ்க் எதுவுமே கொடுக்கப்படவில்லை என்று வெளியில் பேசப்பட்டது. அந்த குறையை தீர்த்து வைக்கும் வகையில் கடந்த வாரம் ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆரம்பித்த போது இது ஒன்றும் அந்த அளவுக்கு பெரிய டாஸ்கில்லை என்று தான் தோன்றியது. ஆனால் உள்ளே இருந்த போட்டியாளர்கள் அதை ஒரு போர்க்களமாகவே மாற்றி விட்டார்கள்.

விஜய் வர்மா ஏற்கனவே முதல் வாரத்திலேயே தேவை இல்லாமல் பேசியதற்காக ஸ்ட்ரைக் வாங்கி இருந்தார். தற்போது நடந்த ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் ரொம்பவும் கோபமாக நடந்து கொண்டதோடு உடலளவில் போட்டியாளர்களை தாக்கியது எல்லோருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கமலஹாசன் எபிசோடில் கண்டிப்பாக அவர் இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.

பார்வையாளர்கள் எதிர்பார்த்தபடி மூன்றாவது ப்ரோமோவில் கமல் இதைப் பற்றி பேசியிருக்கிறார். உங்களுடைய தனிப்பட்ட கோபத்தை இதுபோன்று டாஸ்க்கில் காட்டக்கூடாது என சொல்லி இருக்கிறார். மேலும் ஒரு போட்டி எல்லையை மீறுகிறது என்று தெரிந்தால் உடனே அதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தும் இருக்கிறார். மேலும் விஜய் வர்மா செய்ததை பிரதிப் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்கு அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்.

பிக் பாஸ் விதிகளின்படி உடல் அளவில் காயத்தை ஏற்படுத்தும் போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும். இரண்டாவது சீசனில் இது போன்ற ஒரு டாஸ்க்கில் மகத், டானியை காயப்படுத்தி இருந்தார். அப்போது அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்த சீசனில் விஜய் வர்மாக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. இன்றைய எபிசோடில் இது உறுதியாக தெரிய வரும்.

bb7-promo-vijay-vishnu-new

மூஞ்ச ஒடச்சிடுவேன், அடிதடியில் இறங்கிய போட்டியாளர்கள்.. நாரதர் வேலையை சிறப்பாக செஞ்சி விட்ட பிக் பாஸ்

BB7 Promo: பிக் பாஸ் சீசன் 7 துவங்கி மூன்று வாரம் தான் ஆகிறது அதுக்குள்ள போட்டியாளர்கள் ஜெயிக்கணும்னு வெறித்தனமாக விளையாடுகின்றனர். இதனால் நிகழ்ச்சியும் நாளுக்கு நாள் பரபரப்பாகிறது. இன்று பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் இரண்டு போட்டியாளர்களுக்கும் சேர்ந்து ஒரு கேம் நடத்துகின்றனர். இந்த போட்டியில் வயது வித்தியாசம் பார்க்காமல் அடிதடியில் இறங்கி ரகளை செய்கின்றனர்.

ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பாட்டில்கள் கொடுக்கப்பட்டு அதில் அதிக பாட்டில் எந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த பாட்டில்களை அடித்துக்கொண்டு இரு விட்டாரும் எடுத்து மறைத்து வைக்கின்றனர். இந்த விளையாட்டில் தான் விஜய்- விஷ்ணு இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

அதிலும் விஜய் தன்னுடைய நிஜ முகத்தை காட்டி நெஞ்ச நிமித்திக்கொண்டு விஷ்ணுவுடன் சண்டைக்குப் போகிறார், ஏற்கனவே இவர் வன்முறையாக பேசியதற்கு கமல் ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்தார். இதேபோன்று இன்னும் இரண்டு முறை வாங்கினால் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஆண்டவர் வார்னிங் செய்தார்.

அப்படி இருந்தும் விஜய் கொஞ்சம் கூட தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொள்ளாமல் ரவுடி போல் மூஞ்சி மொகரைய உடைத்து விடுவேன் என்று விஷ்ணுவை சண்டைக்கு அழைக்கிறார். விட்டுருந்தா ரெண்டு பேருக்கும் கைகளப்பே ஏற்பட்டிருக்கும். ஆனால் சக போட்டியாளர்கள் தான் அவர்களை விலக்கி விட்டார்கள்.

‘மூஞ்சிய அடிச்சு ஒடச்சிடுறேன்னு சொல்றான். இந்த மூஞ்சி தான் எனக்கு சோறு போடுது’ என்று அமுல் பேபி விஷ்ணு தனியாக பேசி புலம்புகிறார். ஆனால் விஜய் இந்த வாரம் இரண்டாவது முறையாக கமலிடம் ஸ்ட்ரைக் கார்ட் வாங்குவது உறுதி. கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் விளையாடும் இவரை ஆண்டவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மேலும் எதிர்பாராத அதிரடி திருப்பத்துடன் தற்போது வெளியான இந்த ப்ரோமோவை பார்த்தால் இன்று தரமான சம்பவம் பிக் பாஸ் வீட்டில் நடக்கப் போகிறது. எப்போதுமே இரு வீட்டருக்கும் தனித்தனியாகவே போட்டிகளை நடத்தும் பிக் பாஸ் இந்த முறை இரண்டு பேருக்கும் ஒன்றாக போட்டியை வைத்து, கலவரம் ஏற்பட வேண்டும் என்று நாரத வேலையை சரியாக பார்த்துவிட்டார். பிக் பாஸ் பிளான் புரியாத விஜய் இதில் வசமாக சிக்கிக்கொண்டார்.

தற்போது வெளியான பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ இதோ!

jappan

ராக்கெட் ராஜாவை விட டபுள் மடங்கு சேட்டை செய்யும் கார்த்தி.. ட்ரெண்டிங் ஆகும் ஜப்பான் பட டீசர்

Jappan Movie Teaser: கார்த்தி நடிக்கும் படங்கள் பொதுவாகவே வித்தியாசமான கேரக்டரிலும், ஜாலியான ஒரு படத்திலும் நடிக்கக் கூடியவர். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களை சரியான விதத்தில் என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது. அப்படித்தான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக பொண்ணுங்களிடம் சேட்டை பண்ணிக்கொண்டு ஜாலியான ஒரு கேரக்டராக நடித்திருப்பார்.

அதே மாதிரி தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் உடம்பு முழுவதும் தகதகவென மின்னுகிற மாதிரி சட்டையை போட்டுக்கிட்டு பற்களில் ஒரு தங்க பல்லை வைத்துக்கொண்டு பார்க்கவே காமெடி பீஸ் ஆக தெரிகிறது. இப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரை பார்க்கும் பொழுது ஒரு நகைக்கடையில் 200 கோடி நகை திருட்டுப் போனதை ஒட்டி உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நகை கடையின் சுவற்றில் ஒரு ஓட்டையை போட்டு 200 கோடி நகையே ஆட்டைய போட்டு வெளிநாடுகளுக்கு உல்லாசமாக சென்று ராஜா வாழ்க்கை வாழும் கேரக்டரில் அலைகிறார்.

இதனால் திருட்டு போன நகையை கண்டுபிடிக்கும் விதத்தில் போலீசார் இவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிக்கொண்டு எப்படி கார்த்தி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறார் என்பதும், எதனால் நகை திருடுகிறார் என்பதையும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இதில் வரும் டயலாக், எத்தனை குண்டு போட்டாலும் ஜப்பானை யாரும் அழிக்க முடியாது என்று சொல்லும் வசனம் ரொம்பவே ஹைலைட்டாக இருக்கிறது. அத்துடன் டார்க் காமெடி மூவியாக எடுக்கப்பட்டு அனைவரையும் என்டர்டைன்மென்ட் பண்ணப் போகிறது. இப்படமும் வழக்கம் போல் கார்த்திக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் கார்த்திக் நடிப்பு மற்ற படங்களை விட தூக்கலாகவே இருப்பது போல் தெரிகிறது. மேலும் இப்படத்தில் அணு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், ஜித்தன் ரமேஷ், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை தயாரித்தவர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ். கண்டிப்பாக இந்த வருட தீபாவளி ஜப்பான் படத்துடன் சரவெடியாக இருக்கப் போகிறது.

BB7 Nomination

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 பேர்.. போனவாரம் மிஸ் ஆயிடுச்சு, இந்த வாரம் கண்டிப்பா ஸ்கெட்ச் உனக்குத்தான்

BB7 3rd Week Nomination List: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சீசனில் எப்போதுமே பரபரப்புக்கும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சீசனை தான் எதிர்பார்த்தேன் என்று பிக் பாஸே சொல்லும் அளவிற்கு போட்டியாளர்கள் கண்டன்டுக்கு மேல் கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.

20 போட்டியாளர்களுடன் களம் கண்ட பிக் பாஸ் ஏழாவது சீசனில், முதல் எலிமினேஷன் ஆக அனன்யா ராவ் வெளியேறினார். மேலும் எழுத்தாளர் மற்றும் நடிகர் பவா செல்லதுரை தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இவருடைய வெளியேற்றத்தால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என விஜய் தொலைக்காட்சி அறிவித்துவிட்டது. இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் கமலஹாசன் போட்டியாளர்களை சிறப்பாக சம்பவம் செய்தார். ஸ்மால் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் நடத்திய ஸ்டிரைக் பற்றி கமல் வறுத்தெடுத்து விட்டார். மேலும் மாயாவை ஆடியன்ஸ் உடன் சேர்ந்து கலாய்த்தது ரசிக்கும் அளவிற்கு இருந்தது. அதே நேரத்தில் வீட்டின் நிறைகள் மற்றும் குறைகளை தெள்ளத் தெளிவாக அலசி விட்டிருந்தார் ஆண்டவர்.

இன்று மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. அதற்கு முன்பே காலையிலிருந்து மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து இவர்கள் யாரை நாமினேஷன் செய்ய வேண்டும், இவர்களை யார் நாமினேஷன் செய்வார்கள் என பேசிக்கொண்டிருந்தார்கள். நாமினேஷன் பற்றி ஒருவருக்கொருவர் டிஸ்கஸ் செய்யக்கூடாது என்பது பிக் பாஸ் ரூலில் இருக்கிறது. இவர்கள் இருவரும் இப்போது அதையும் மீறி இருக்கிறார்கள்.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மாயா, மணி, பூர்ணிமா, பிரதீப், விசித்ரா, ஐஷு ஆகியோர் இருக்கிறார்கள். இதில் கண்டிப்பாக பிரதீப் முதலிலேயே சேவ் ஆகிவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வயதானவர்களைத்தான் முதலில் எலிமினேட் செய்வார்கள் என்று இருந்த பிக் பாஸ் இலக்கணத்தையே விசித்ரா மாற்றி இருக்கிறார். கண்டிப்பாக விசித்திரா வெளியில் போக வாய்ப்பே இல்லை.

மாயா மற்றும் பூர்ணிமா சேவ் ஆகி, மணி மற்றும் ஐஷு இருவருக்குள் ஒருவர் வெளியேறுவது என்பது கனவிலும் நடக்காத விஷயம். இப்போது மோஸ்ட் வாண்டட் லிஸ்டில் இருப்பவர்கள் என்றால் அது மாயா மற்றும் பூர்ணிமா தான். மாயா ஏற்கனவே கர்ணம் தப்பினால் மரணம் என்றுதான் இந்த வாரம் வீட்டிற்குள் இருக்கிறார். எனவே கண்டிப்பாக மாயா தான் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் அதிகம்.

leo-trisha-vijay

விஜய்யுடன் சில்லுன்னு ரொமான்ஸ் செய்யும் த்ரிஷா.. லியோ 3ம் பாடல் உயிர் பாதி உனக்கே எப்படி இருக்கு?

Leo Third Single: லியோ திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படகுழு ஒவ்வொரு அப்டேட் ஆக கொடுத்து ரசிகர்களை தங்கள் கண்ட்ரோலில் வைத்து வருகின்றனர். அதில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றதோடு சர்ச்சையையும் கிளப்பியது.

ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டிய லியோ டீம் தற்போது மூன்றாவது பாடலை வெளியிட்டு இருக்கிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் இப்போது இதை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் அதிரடியாக தான் இருந்தது.

ஆனால் இந்த பாடல் கண்ணுக்கு குளிர்ச்சியாக சில்லுனு மெலடியாக ரசிகர்களை மெர்சலாக்கி உள்ளது. அதிலும் பல வருடங்களுக்குப் பிறகு திரிஷா விஜய்யை இப்படி ரொமான்டிக்காக பார்ப்பதும் அசத்தலாக இருக்கிறது. இதற்கு முன்பாக இவர்கள் இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.

ஆனால் இதில் கணவன் மனைவியாக குழந்தை குடும்பம் என்று இருக்கும் அவர்களுடைய கெமிஸ்ட்ரி வேற லெவலில் உள்ளது. நிஜ வாழ்க்கையில் விஜய்க்கு ஒரு மகன் மகள் இருப்பது போல் படத்திலும் காட்டப்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் உயிர் பாதி உனக்கே உனில் பாதி எனக்கே என தொடங்கும் பாடலும் ரம்யமாக உள்ளது.

காஷ்மீரின் அழகோடு இந்த பாடலும் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. மேலும் அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரனின் நெஞ்சமே. நரை வந்ததும் எனக்கே துணை நீயும் அருகே என பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பினை காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு மெல்லிசையுடன் வெளிவந்திருக்கும் இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் இரவு நேர பயணத்தின் போது கேட்பதற்கு தகுந்த பாடல் என பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் திரிஷாவின் ரொமான்ஸை திரையில் பார்க்கும் ஆர்வத்தையும் இந்த பாடல் தூண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

bb-house-maaya-bb7

சகுனி வேலையை சரியாக பார்த்த மாயா.. ரணகளமான பிக் பாஸ் வீடு, கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கும் சைக்கோ

Bigg Boss Season 7 Promo: பிக் பாஸ் சீசன் 7 நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. இதிலிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் வேணுங்கிற கன்டன்ட்டை வாரி வழங்குகின்றனர். அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் போன்ற இரு வீட்டார்களிடமும் பகை முற்றிவிட்டது.

நேற்று நடந்த பிரச்சினையை வைத்து பிரதீப் சமைக்க முடியாது என படுக்கையிலேயே படுத்து இருக்கிறார். அவர் வந்தால் மட்டுமே சமையல் வேலையை ஆரம்பிக்க முடியும் என ஸ்மால் பாஸ் ஹவுஸ் போட்டியாளர்கள் ஸ்ட்ரைக் செய்கின்றனர். இதற்கெல்லாம் சகுனியாக மாயா தான் இருந்து மொத்த திட்டத்தையும் தீட்டுகிறார்.

இவர் தொடக்கத்திலிருந்தே ஸ்மால் பாஸ் ஹவுஸில் இருப்பவர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை எப்படி எல்லாம் டார்ச்சல் செய்ய முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் டார்ச்சர் செய்து வருகிறார். சாப்பாட்டில் மிளகாய் பொடியை அள்ளிப் போடுவது, சேமியாவை கேவலமாக செய்து தருவது என இவர்களுடைய அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இப்போது மொத்தமாகவே சமைக்க முடியாது என ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்சை சகுனி மாயா ட்ரிகர் செய்துவிட்டார். இதற்கு பிரதீப்பும் ஒத்துழைத்து பிக் பாஸ் வீட்டை ரணகளம் ஆக்குகிறார். இப்படி கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீட்டில் இனி ஏகப்பட்ட பிரச்சனைகள் ஆரம்பிக்கப் போகிறது. ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் சமைத்து தர முடியாது என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சோறு போடாமல் சாவடிக்க பார்க்கின்றனர்.

ஆனால் அவர்கள் கில்லாடித்தனமாக பிரட், ஸ்நாக்ஸ் போன்றவற்றை பதுக்குகின்றனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டாரும் இதே வேலையை பார்க்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சோத்து பிரச்சனை தான் தலை விரித்தாட போகிறது. இதற்கு கமல் நிச்சயம் சரியான பதிலடி கொடுப்பார்.

பிக் பாஸ் சீசன் 7  இன்றைய ப்ரோமோ இதோ!

bb-7-contestants-promo

உங்களுக்கு பேச தகுதியில்லை மூடிட்டு உட்காரு.. சும்மா கிடந்தவனை சொறிஞ்சு விட்ட சைக்கோ

Bigg Boss Season 7 Promo: விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒரு வாரத்தை மட்டுமே கடந்திருக்கும் நிலையில், 2-வது வாரத்தில் அனல் பறக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்று நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்திருக்கிறது. அதிலும் கோல்டன் ஸ்டாரை பெறவேண்டும் என போட்டியாளர்கள் தங்களை ஒரு நல்ல என்டர்டைனர் என்பதை பேசி நிரூபிக்க வேண்டும்.

இந்த டாஸ்கின் போதுதான் நிக்சன் மற்றும் பிரதீப் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக போட்டியாளர்களின் மத்தியில் சைக்கோ போல் நடந்து கொள்கிறார் என விமர்சிக்கப்படும் பிரதீப், சும்மா இல்லாமல் நிக்சன் தன்னை ஒரு என்டர்டைனர் என நிரூபித்துக் கொண்டிருக்கும் போது ஆடிக்காட்டு, பாடி காட்டுன்னு கிண்டலடித்திருக்கிறார்.

உனக்கெல்லாம் பேச தகுதியே இல்ல மூடிட்டு உட்காரு என்று நிக்சனைப் பார்த்து பிரதீப் சொன்னார். அதைக் கேட்டதும் வெறியேறிய நிக்சன், ‘என்ன பாத்து தகுதி இல்லைன்னு சொல்ல உனக்கு கொஞ்சம் கூட தகுதி இல்ல. பாட்டு பாடி உழைத்து இங்கு வந்திருக்கிறேன், ஆனா நீ இந்த நிகழ்ச்சியை வெளியில் நன்றாக பார்த்து தெரிந்து கொண்டு ஒரு ஸ்டேடர்ஜியுடன் கேவலமாக ஒரு கேம் ஆடிட்டு இருக்கிற, அப்படி கேவலமாக ஆட வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.

என்ன பாத்து பாடி காட்டு, ஆடி காட்டு என எல்லாம் சொல்லாத. உனக்கு அதெல்லாம் வரலைனா மூடிட்டு உட்காரு’ என்று பிரதீப்புக்கு பதிலடி கொடுத்தார். இவர்களது சண்டையால் பிக் பாஸ் வீடே ரணகளமானது, மற்ற போட்டியாளர்கள் எல்லாம் கப்பு சுப்புன்னு அப்படியே சிலை போல திகைத்து நிற்கின்றனர்.

நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. அதிலும் இப்போது நிக்சன் மற்றும் பிரதீப் இருவரும் காரசாரமாக சண்டை போடுவது நிகழ்ச்சியை மேலும் சூடேற்றி விட்டது. அது மட்டுமல்ல இந்த சீசனில் நிதானத்துடன் விளையாடும் நிக்சன் நிச்சயம் பைனல்ஸ் வரை சென்று டைட்டிலை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ இதோ!

bb7-contestants kamal

முதல் முறையாக திமிரு பேச்சுக்கு ஸ்ட்ரைக் அடித்து விட்ட பிக் பாஸ் 7.. இந்த பொழப்புக்கு வெளியே தூக்கி இருக்கணும்

Bigg Boss Promo: எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட சூடு பிடிக்கும். அதிலும் இன்று சரவெடியாக இருக்கப் போகிறது. நிகழ்ச்சியில் கமல் தரமான  சம்பவத்தை செய்து இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7ன் முதல் கேப்டனான விஜய் பிரதீப்பை வன்முறையான பேச்சால் கண்டித்தார். இது சுத்தமாகவே யாருக்கும் பிடிக்கல. இதை கவனித்த கமல் இன்றைய நிகழ்ச்சியில் விஜய் சொன்னதை அப்படியே சொல்லிக்காட்டி இதெல்லாம் என்ன பேச்சு என்று தப்பை சுட்டி காட்டினார் .

Also Read: விசித்ரா, ஜோவிகா யார் பக்கம் நியாயம்.. அனல் பறக்கும் ஆண்டவரின் தீர்ப்பு

உடனே விஜய் அப்படியெல்லாம் சொல்லல சார் என்று மறுக்க, குறும்படம் போட்டு காட்டிடுவேன் என்று வாயடைத்தார்.  பின்பு கமல் அவருடைய திமிருத்தனமான பேச்சுக்கு கண்டனம் என்று ஸ்ட்ரைக் (strike) கார்டை தூக்கி காண்பித்தார்.

இதேபோன்று மீண்டும் நிகழ்ந்து இந்தக் கார்டை ஒருவர் மூன்று முறை பெற்று விட்டால் அதிரடியாக அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதை  கமல் இன்றைய நிகழ்ச்சியில் காட்டமாக தெரிவித்தார். அதற்கான ப்ரோமோ வெளியாகி ட்ரெண்ட் ஆகிறது.

Also Read: பிக் பாஸ் 7ல் இந்த வாரம் வெளியேறப் போகும் முதல் நபர்.. ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ப்ரோமோவில் விஜய் மட்டுமல்ல இன்னும் வீட்டில் இரண்டு பேருக்கு ஸ்ட்ரைக் கார்டு கொடுக்க வேண்டும் என்று மாயா பரிந்துரைத்தார். அவர் கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா இருவரையும் மனதில் வைத்து தான் சொல்கிறார்.

உடனே கமல் எதற்காக விஜய்க்கு மட்டும்  கொடுத்திருக்கிறேன் என்பதையும் விளக்கினார். விஜய் ஒருவரின் சோகத்தை கிண்டலடித்தும் பேசினார். அது என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன்.  கூட இருந்து பேசி சிரித்தவர்களுக்கு அது தெரியும் என்று விஜய்யின் முகத்திரையை கிழித்து கேப்டனை கதி கலங்க வைத்தார். தொடர்ச்சியாக வெளிவந்த இந்த ரெண்டு ப்ரோமோ மூலம்  இன்றைய எபிசோட் ரணகளமாக இருக்க போகிறது.

 ரணகளமாக வெளியான பிக் பாஸ் ப்ரோமோ!

Also Read: பிக்பாஸில் முதல் ஆளாக வெளியேற போவது அனன்யா இல்லையாம்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்து அனுப்பிய கமல்

bb7-promo-today

அடிச்சு வாய ஒடச்சிடுவேன், போடா லூசு.. 5வது நாளே கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

ஐந்தாவது நாளே இந்த கொலவெறியா என பிக் பாஸ் ரசிகர்கள் வாயடைத்துப் போய் உட்காரும் வகையில் தற்போது அதிரடியான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.

அதுவும் இப்போது வந்திருக்கும் ப்ரோமோவில் கேப்டனான விஜய் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்சை அழைத்து தர லோக்கலாக இறங்கிப் பேசுகிறார். பிரதீப் தன்னுடைய ஷூவை இடித்துவிட்டு போனாரு. திடீர்னு எனக்கு கோபம் வந்துவிடும். கோபத்தில் மூக்கு வாயெல்லாம் அடிச்சு ஒடச்சிடுவேன்.

Also Read: யோக்கியன் மாதிரி கவினை அடிச்சீங்க பிரதீப், இந்த லிப்லாக் சீன் எடுக்க 8 டேக்கா.? காட்டுத் தீயாய் வைரலாகும் புகைப்படம்

இங்க மட்டுமல்ல வெளியிலும் என்மீது பாசமாக இருக்கும் பசங்க நிறைய பேர் இருக்காங்க. வெளியே போனாலும் உங்களை சும்மா விடமாட்டாங்க என்று பிரதீப்பை விஜய் ரவுடி போல் மிரட்டுகிறார். இதைக் கேட்டதும் பவா செல்லதுரை, ‘விஜய் இப்படி பேசுவது சரிதான் என்று யாராவது ஒருத்தர் சொல்லுங்க’ என்று கேப்டனின் அகம்பாவத்தை சுட்டிக்காட்டுகிறார்.

உடனே விஷ்ணு ஆவேசப்பட்டு, விஜய் முன்பு நெஞ்ச நிமித்திக்கிட்டு சண்டைக்கு போறாரு. நான் இப்போ உன்னை செருப்பால தட்டினா நீ என்ன பண்ணுவ, முடிஞ்சா என்னை அடிச்சு பாரு! என்று கேட்கிறார். உடனே விஜய் முதல்ல நீ என்ன செருப்பால தட்டி பாரு என்று இருவரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் மேடையை அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கவினை அடிச்ச அளவுக்கு உனக்கு அறிவு பத்தல தம்பி

திடீரென்று பிரதீப் எழுந்து நான் எல்லாரையும் அடிக்க போறேன் என்று லூசு மாதிரி பேசுறாரு. இப்படி பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறியதால் மாயா இடையில் குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்த பார்க்கிறார். உடனே பிரதீப் எதற்காக என்னை பார்த்து பேசுகிறாய் என்று கேட்க உடனே மாயா, ‘போயா யோவ்’ என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

இப்படி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கை நீட்டும் அளவுக்கு வந்துவிட்டனர். இது பற்றி நாளை நிகழ்ச்சிகள் கமல் வெளுத்து வாங்க போகிறார். அதிலும் விஜய், பிரதீப் இருவரின் போக்கு சுத்தமாகவே சரியில்லை. இவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

அதிரடியாக வெளியான பிக் பாஸ் ப்ரோமோ இதோ!

Also Read: 4வது நாளே போட்டியாளர்களை வச்சு பிதுக்கும் பிக் பாஸ் 7.. மேக்கப் இல்லன்னா இவங்க மூஞ்ச பார்க்கவே முடியாதே குருநாதா

leo-trailer

ஓடனும், ஒளியனும் பயந்து பயந்து சாகனும், வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர்

Leo Trailer: லியோ ரிலீஸுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் இப்போது ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். விஜய், லோகேஷ் கூட்டணியில் படு மாஸாக உருவாகி இருக்கும் இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பே வெளியானது.

ஆனால் டைம் என்ன என்பதை மட்டும் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கவில்லை. இதனாலயே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் லியோ ட்ரெய்லர் தற்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது.

Also read: அவ்வளவு சம்பளம்லாம் கொடுக்க முடியாது.. விஜய்யும், சன் பிக்சரும் சேர்ந்து செய்த பெரிய துரோகம்

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பமே விஜய்யின் குரலில் கதை சொல்வது போல் தொடங்குகிறது. அதை தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் வன்முறையும், சீரியல் கில்லர் அர்ஜுனின் வெறித்தனமான ஆட்டமும், சஞ்சய் தத்தின் வில்லத்தனம் என ஒவ்வொன்றும் ஆக்ரோஷ தாண்டவமாக இருக்கிறது.

அவர்களை எதிர்த்து நிற்கும் விஜய், அவருடைய மனைவி த்ரிஷா மற்றும் குழந்தை, போலீஸ் ஆபீஸர் கௌதம் மேனன் என முக்கிய கேரக்டர்களும் மிரள வைக்கிறது. அதன்படி இரண்டு விஜய் என்று பலரும் யூகித்தது போல் டைலரிலேயே ஹின்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: போடு வெடிய, ஒரு நாளுக்கு முன்பே வெளியாகும் லியோ.. முத்துவேல் பாண்டியன் வசூலை உடைக்க போறது உறுதி

அந்த வகையில் லியோ, பார்த்திபன் என்ற இரு கதாபாத்திரங்களில் மிரட்டும் விஜய்யின் ருத்ரதாண்டவம் வீடியோ முழுவதும் தெறிக்கிறது. இப்படியாக அனல் பறக்க வெளிவந்துள்ள லியோ ட்ரெய்லர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

bb-7-promo

4வது நாளே போட்டியாளர்களை வச்சு பிதுக்கும் பிக் பாஸ் 7.. மேக்கப் இல்லன்னா இவங்க மூஞ்ச பார்க்கவே முடியாதே குருநாதா

Bigg Boss Season 7 Promo: சீசன் 7 துவங்கப்பட்ட நாளே நாளில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பிக் பாஸ் வச்சு செய்கிறார். மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ஆரம்பித்த ஒரு சில தினத்திலேயே சூடு பிடிச்சிருச்சு. இந்த முறை ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்து நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்பாகி கொண்டிருக்கின்றனர்.

அதுவும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை வைத்து பார்த்தால் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் மேக்கப் பொருட்களை பறிக்க வேண்டும் என பிக் பாஸ் குறி வைத்திருக்கிறார். இது சுவாரசியமாக இருந்தாலும் இந்த மூஞ்சிகளை எல்லாம் மேக்கப் இல்லாமல் எப்படி பார்க்க முடியும். எங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க குருநாதா என்று நெட்டிசன்கள் ப்ரோமோவை பார்த்துவிட்டு கலாய்க்கின்றனர்.

Also Read: 7 பேரில் இந்த வாரம் வெளியேறப் போகும் பிக் பாஸ் போட்டியாளர்.. சுத்தி சுத்தி செய்யும் மட்டமான வேலை

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான ஷாப்பிங் ரீ பேமென்ட் டாஸ்க் இன்று நடத்தப்பட்டது. இந்த டாஸ்கின் பெயர் வெயிட் பார்ட்டி. இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் அவர்களது மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படும். இப்படி ஒரு வில்லத்தனமான டாஸ்க் கொடுத்து பெண் போட்டியாளர்களை கதி கலங்க வைத்திருக்கின்றனர்.

வெயிட் பார்ட்டி டாஸ்கில் எடை மிஷின் 340 கிலோ காட்ட வேண்டும். இதற்கு எத்தனை போட்டியாளர்கள் வேண்டுமானாலும் எடை மேடையில் ஏறி நின்று கொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை கையில் எடுத்துக் கொண்டு அதோடு எடை மேடையில் நிற்கணும். இதுதான் இந்த டாஸ்கின் ரூல்ஸ்.

Also Read: செழியினை விட கோபியை பரவாயில்லை போல.. இந்த நிலைமையிலும் பொம்பள சோக்கு கேக்குதா?

பிக் பாஸ் சொன்னது போல் 340 கிலோவிற்கு ஏற்றவாறு போட்டியாளர்களை தேர்வு செய்து எடை மேடையில் நிற்க வைத்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் பிரதீப் கால் தடுமாறி எடை மேடையில் இருந்து கீழே இறங்கி விட்டார். அப்படி என்றால் இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தோற்றுவிட்டனர்.

ஏற்கனவே பிக் பாஸ் சொன்னது போல் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்பட போகிறது. இத நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமா ரவி, மாயா, அக்ஷயா, ஜோவிகா போன்ற பெண் போட்டியாளர்கள் எல்லாம் மேக்கப் போட்டா தான் கொஞ்சமாவது பார்க்க முடியும்.

Also Read: கடுப்பேத்தும் அசீம் 2.0, புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் வாயாடி பெத்த புள்ள.. சுவாரஸ்யமாகும் பிக்பாஸ் 7

அதுவே இனி இல்லை என்றால் இந்த வாரம் முழுவதும் இந்த மூஞ்சிகளை எப்படி சகிக்கிறது என தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவால் பிக் பாஸ் ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஒதுக்கி வைக்கப்பட்ட ஸ்மால் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு.

பிக் பாஸ் போட்டியாளர்களை வச்சு செய்யும் ப்ரோமோ இதோ!

ganapath-teaser

எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. ஜவானை மிஞ்சிய கணபத் மிரட்டும் டீசர்

Ganapath Teaser: சமீபத்தில் பாலிவுட் சினிமா மட்டுமன்றி ஒட்டு மொத்த சினிமாவையுமே ஆட்டிப்படைத்தது ஷாருக்கானின் ஜவான் படம். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியான 18 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிட்டது.

இப்போதும் திரையரங்குகளில் ஜவான் படம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. இந்த சூழலில் ஜவான் படத்தையே மிஞ்சும் அளவுக்கு கணபத் என்ற மிரட்டும் டீசர் வெளியாகி இருக்கிறது. அதாவது டைகர் ஷெராப், அமிதாப் பச்சன் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் கணபத் படம் உருவாகி இருக்கிறது.

Also Read : பதான், ஜவான் 1000 கோடி வசூல் செஞ்சாச்சு.. ஷாருக்கானின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஆப் அடிக்கும் பிரபாஸ்

இந்த படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ளார். மேலும் வாசு பாக்னானி தயாரித்திருக்கிறார். மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள். அதுவும் கணபத் படத்தின் டீசர் ரசிகர்களை வியக்கும் படியாக அமைந்திருக்கிறது.

அதாவது மக்கள் போருக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும்போது நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வர வரைக்கும் இந்த யுத்தத்தை தொடங்க வேண்டாம் என்ற ஒரு குரல் கேட்கிறது. அப்போது தான் டைகர் ஷெராப் என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனை நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என்ற கர்ஜனை குரலுடன் வருகிறார்.

Also Read : அட்லிக்கு குரு உச்சத்துல இருக்காரு.. 4 வருஷம் பட்ட கஷ்டம், மிரள வைக்கும் ஜவான் மொத்த கலெக்சன்

அதன் பிறகு தான் போர் ஆரம்பிக்க இருக்கிறது. மேலும் இந்த டீசர் இப்போது ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளதால் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கணபத் படம் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய்யின் லியோ படத்திற்கு கணபத் கண்டிப்பாக டஃப் கொடுக்கப் போகிறது.

Leo

சிங்கம் எறங்கினா காட்டுக்கே விருந்து, குலசாமிய வேண்டிக்க நீ.. வெறித்தனமாக வந்த லியோ செகண்ட் சிங்கிள்

Leo Second Single: விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த லியோ செகண்ட் சிங்கிள் தற்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. நேற்று முதலே ஆடியோ லான்ச் இல்லை என்ற வருத்தத்தில் இருந்த அனைவருக்கும் இது சரியான ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் அனிருத்தின் ஆக்ரோஷமான குரலில் படாசும்மா என சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த பாடல். சிங்கம் இறங்கினா காட்டுக்கே விருந்து என ஆரம்பித்து ஒவ்வொரு வரியும் வெறித்தனமாக இருக்கிறது.

Also read: விஷ பூச்சிகள் வேலையால் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ ஆடியோ லான்ச்.. அதிர்ச்சியான உண்மை காரணம்

அதிலும் பெரும் புள்ளிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி எழுதி குடல் உருவும் சம்பவம் உறுதி. நூறு பஞ்சாயத்தை தீர்த்தாச்சிடா வரலாறு மொத்தம் பிளட் ஆச்சுடா என பாடல் மொத்தமும் தீப்பொறியாக இருக்கிறது. இதுவே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டியுள்ளது.

அது மட்டுமல்லாமல் தலைவர் அலப்பறை பாடல் வெளிவந்த போது ஒட்டு மொத்த துறைலகமும் அதிர்ந்து போய் பார்த்தது. அதே அளவுக்கு ஒரு பரபரப்பை தான் இந்த செகண்ட் சிங்கிள் பாடலும் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் லியோ பதிலடி கொடுத்து விட்டார் எனவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றனர்.

Also read: ரெட் ஜெயண்டுக்கு தர மறுத்த விஜய்.. நேரம் பார்த்து செக் வைத்த உதயநிதி, முன்கூட்டியே கணித்த சவுக்கு சங்கர்

அந்த வகையில் புல்லரிக்க வைக்கும் வகையில் இருக்கும் பின்னணி இசையும், பாடல் வரிகளும் தரமான சம்பவத்திற்கு லியோ தயார் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. இதற்கே இப்படி என்றால் அடுத்த வாரம் வர இருக்கும் ட்ரெய்லர் எந்த அளவுக்கு ஆவலை தூண்டும் என்பது இப்போதே தெரிகிறது.

Vikram Karna

திடீரென இணையத்தை மிரட்டும் சூரிய புத்திர கர்ணன் டீசர்.. தங்கலானை மிஞ்சும் எதிர்பார்ப்பு

Vikram – Karnan Movie Teaser: பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பற்றிய அறிவிப்பு அல்லது போஸ்டர், டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளியாவதாக இருந்தால் அது சில நாட்களுக்கு முன்பே மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கி விடும். ஆனால் சீயான் விக்ரம் நடித்திருக்கும் கர்ணன் படத்தின் டீசர் நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

விக்ரமுக்கு அடுத்தடுத்து தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் ரிலீஸுக்கு காத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கர்ணன் என்று ஒரு படம் அவர் லிஸ்ட்டில் இருப்பது யாருக்குமே தெரியாது. தெரிந்தவர்களும் மறந்து இருப்பார்கள். ஏனென்றால் இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படத்தை இயக்குபவர் விமல்.

Also Read:அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

மகாபாரத கதையின் முக்கிய கேரக்டரான கர்ணனின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுவதாக அப்போது அறிவிப்பு வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 300 கோடி செலவு தயாரிக்க திட்டமிட்டு இருந்த கர்ணன் படத்தின் ஒரு சில ஆக்சன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் படத்தை பற்றி எந்த அறிவிப்பும் கடந்த ஆறு வருடங்களாக வெளியாகவில்லை.

இந்த டீசரில் சீயான் விக்ரம் ஒரு போர்க்கள சீனில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் ஆதித்த கரிகாலனையே மிஞ்சும் அளவிற்கு இந்த கர்ணன் இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக மெய் சிலிர்த்து போயிருக்கும். அந்த அளவுக்கு இதிகாசத்தில் வாழ்ந்த கர்ணன் கேரக்டரை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

Also Read:பல வருடம் கிடப்பில் போட்ட படத்தை தூசி தட்டிய ஜெயம் ரவி.. எல்லாம் இறைவன் கொடுக்கிற தைரியம்

ஒரு பக்கம் இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் மறுபக்கம் உண்மையிலேயே இந்த படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறாரா இல்லை ஏற்கனவே எடுத்த காட்சியை விக்ரமுக்கு தெரியாமலேயே ரிலீஸ் செய்து விட்டார்களா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் விக்ரம் தரப்பிலிருந்து இதுவரை இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் சொல்லப்படவில்லை.

சீயான் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கும் படம் தங்கலான். அதற்கு போட்டியாக இப்போது கர்ணன் படம் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது . இந்த படத்தைப் பற்றி முழு தகவல் விரைவில் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:இறைவனைப் பார்த்து மிரண்ட சென்சார் போர்டு.. முதன்முறையாக ஜெயம் ரவி படத்துக்கு கிடைத்த சர்டிபிகேட்

chandramukhi-trailer

நிஜ சந்திரமுகியை இறக்கிவிட்டு பயமுறுத்தும் வாசு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அடுத்த டிரைலர்

Chandramukhi 2 Trailer: பி வாசு இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற படம் சந்திரமுகி. மேலும் திரையரங்குகளில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமையை சந்திரமுகி படம் தான் தற்போது வரை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு வாசு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்.

லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா மற்றும் வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் செப்டம்பர் முதல் வாரமே சந்திரமுகி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் மீதம் இருந்ததால் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Also Read : மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

மேலும் ரிலீஸ் நெருங்குவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு ரிலீஸ் தேதியுடன் டிரைலரை வெளியிட்டுள்ளது. அதில் தொடக்கத்திலேயே ஜோதிகாவின் புகைப்படம் இடம் பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருந்தது. மேலும் முதல் பாகத்தில் ஜோதிகா தன்னை தானே சந்திரமுகி ஆக நினைத்துக் கொண்டு பேயாக மாறிவிடுவார்.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நிஜ சந்திரமுகி இறங்கி வந்துள்ளதாக வடிவேலு கூறி இருக்கிறார். அதன்படி கங்கனா ரனாவத் அவர் தான் சந்திரமுகியாக நடித்திருக்கிறார். அதிலும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் பட்டையை கிளப்பி இருக்கிறார். பேய் படம் என்றாலே அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Also Read : ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் வடிவேலு, ரஜினி காம்பினேஷன் சந்திரமுகி படத்தில் எப்படி நன்றாக இருந்ததோ அதேபோல் தான் லாரன்ஸ், வடிவேலு கூட்டணியும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

irugapatru-trailer

சண்டை போட காரணம் வேணாம் கணவன் மனைவியா இருந்தாலே போதும்.. கவனம் ஈர்க்கும் இறுகப்பற்று ட்ரெய்லர்

Irugapatru Trailer: சண்டை போடாத கணவன் மனைவிய கனவுல கூட பார்க்க முடியாது. காதலிக்கும் போது இருக்கும் அன்பு திருமணத்திற்கு பிறகு குறைந்து போவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உருவாகி இருக்கும் படம் தான் இறுகப்பற்று.

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அதன் ஆரம்பத்திலேயே பல்வேறு மனநிலையில் இருக்கும் தம்பதிகள் காட்டப்படுகின்றனர்.

Also read: வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

மனைவியிடம் காதல் உணர்வை எதிர்பார்க்கும் ஸ்ரீ, மனைவி குண்டாக இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதார்த் என ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து மனநல ஆலோசகராக வரும் ஷ்ரத்தா, அவரின் கணவராக வரும் விக்ரம் பிரபு என ஒவ்வொன்றும் கவனம் ஈர்த்துள்ளது.

அதிலும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியா இருக்கிறதே பெரிய காரணம் தான் என்ற வசனம் எதார்த்தத்தின் வெளிப்பாடு. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் தம்பதிகளின் உளவியல் பிரச்சனை குறித்து இப்படம் பேசுகிறது.

Also read: லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

வரும் அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் விக்ரம் பிரபுவுக்கு நிச்சயம் ஒரு கம்பேக்காக இருக்கும். அதே போன்று மாநகரம் ஸ்ரீ எங்கப்பா என தேடி வந்த நிலையில் அவருடைய என்ட்ரியும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

trisha-the road

லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

Actress Trisha: நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா இப்போது படு பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். அடுத்தடுத்து அவருடைய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதில் லியோ மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்துள்ள தி ரோடு ட்ரெய்லர் பெரும் ஆர்வத்தை உருவாக்கி இருக்கிறது.

அருண் வசீகரன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அப்படி பார்த்தால் லியோவுக்கு முன்பே திரிஷா மாஸ் காட்ட இருக்கிறார்.

Also read: விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பமே படு மிரட்டலாக தான் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அதை கண்டுபிடிக்க வரும் திரிஷா கதையின் நாயகியாக மிரள வைத்திருக்கிறார். பதைபதைக்க வைக்கும் காட்சிகள், மிரட்டும் பின்னணி இசை என ஒவ்வொன்றையும் பார்க்கும் போது கொஞ்சம் மிரட்சியாக தான் இருக்கிறது.

Also read: சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக பிடித்த விஜய்.. டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

அதிலும் திரிஷா வெறித்தனத்தோடு சண்டையிடும் காட்சிகளும் வேற லெவலில் இருக்கிறது. அந்த வகையில் ட்ரெய்லரிலேயே மொத்த ஆடியன்ஸையும் கவர்ந்துள்ள தி ரோடு மூலம் இளவரசி குந்தவை லேடி சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளி விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

shot-boot-three-trailer

வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

Venkat Prabhu-Sneha: திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கலக்கலாக இருக்கும் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு, சினேகாவின் மகன் எனக்கு போர் அடிக்குது ஒரு தம்பி வேணும் என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து அவரின் பிறந்தநாளுக்கு ஒரு நாயை பரிசாக கொடுக்கின்றனர்.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

அதை தம்பி போல் பார்த்துக் கொள்ளும் சினேகாவின் மகன் தன் இரண்டு நண்பர்களோடு அடிக்கும் கூத்து பசங்க படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் திடீரென அந்த நாய் காணாமல் போகவே பதறி அடித்துக் கொண்டு அனைவரும் தேடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து யோகி பாபுவின் கைக்கு வரும் அந்த நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சென்றதா என்ற எதிர்பார்ப்புடன் ட்ரெய்லர் முடிகிறது. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவத்தை தான் கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஷாட் பூட் த்ரீ நிச்சயம் குடும்ப ஆடியன்ஸை கவரும்.

simbu-STR48

தயாரிப்பாளர்களை கோர்ட், கேஸ்னு சுத்தலில் விடும் சிம்பு.. காசுக்காக இறங்கி நடிச்ச விளம்பரம்

Actor Simbu:  சிம்புவின் அலும்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டு தான் போகிறது. அதாவது ஆரம்பத்தில் சிம்பு படக்குழுவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிறைய சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ஆனால் மாநாடு படத்திற்குப் பிறகு மொத்தமாக தன்னை மாற்றிக்கொண்டு முழுவதுமாக படங்களில் செயல்பட உள்ளதாக வெளிப்படையாக பேசி இருந்தார்.

இனி என்னுடைய ரசிகர்கள் யாரும் அவமானப்படக்கூடாது, அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வேன் என வசனங்களை விட்டெறிந்தார் சிம்பு. ஆனால் அவர் இப்போது செய்திருக்கும் காரியம் தான் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. அதாவது சமீபத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் சிம்பு மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also Read : சிம்புவிடம் ஒரு கோடி எடுத்து வைக்க சொன்ன தயாரிப்பாளர்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதி

அதாவது கோவிட் தொற்று முதல் அலைக்கு பிறகு கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களினால் இந்த படம் தள்ளிப் போக அதன் பிறகு கால்ஷீட் கொடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக சிம்பு பெற்றிருந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு வருடத்திற்குள் சிம்பு நேரம் ஒதுக்கியும் படம் எடுக்காததால் தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க தேவையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு தயாரிப்பாளர்களை கோர்ட்டு, கேஸ் என்று அலையவிட்டுக் கொண்டிருக்கும் சிம்பு காசுக்காக ஒரு காரியம் செய்துள்ளார்.

Also Read : மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

அதாவது தயாரிப்பாளர்களுக்கு தேதி கொடுக்க நேரமில்லாத சிம்பு இப்போது விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதாவது போக்குவரத்து சம்பந்தமான அபிபஸ் என்ற ஒரு இணையதள செயலி விளம்பரத்தில் மாஸ் லுக்கில் சிம்பு நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சிம்பு விளம்பரங்களில் நடிப்பதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் படங்களில் தயாரிப்பாளர்கள் பெரிய தொகை போட்டு காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு விளம்பரங்களில் நடிப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

ashok-selvan-and-keerthi-pandiyan

அசோக் செல்வன், கீர்த்திக்கு காதல் உருவாக காரணமான ரொமான்டிக் படம்.. திருமணத்திற்காக வெளியிட்ட வீடியோ

Ashok Selvan- Keerthi Pandiyan: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை விட ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் இன்று நட்சத்திர தம்பதியர்கள் ஆக நடிகர் அசோக் செல்வன்- கீர்த்தி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஸ்பெஷல் டேவில் இவர்கள் இருவரின் ரொமான்டிக் லிரிக்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இன்று திருமணமான அசோக் செல்வன்- கீர்த்தி இருவரின் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அது மட்டுமல்ல இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியை எப்படி வளைத்து போட்டார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.

Also read: அருண் பாண்டியனின் 120 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான அசோக் செல்வன்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

இதற்கு முழு காரணமும் இயக்குனர் பா.ரஞ்சித் தான். ஏனென்றால் அவர் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கிய திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார் இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அசோக் செல்வன் இணைந்து நடித்திருக்கிறார்.

அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு அசோக் செல்வனின் அழகு மட்டும் இன்றி குணமும் பிடித்துப் போனதால் இவர்களது காதல் இப்போது திருமணத்தில் முடிந்து இருக்கிறது. மேலும் இவர்களது திருமண நாளான இன்று ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் என்ற ரொமான்டிக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also read: இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

இந்த பாடல் முழுக்க முழுக்க காதல் பாட்டு என்பதால் அதில் இருக்கும் வரிகள் அனைத்தும் ரொம்பவே ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட லவ் ஸ்டோரியில் நடித்தால் காதல் பத்திக்க தானே செய்யும் என்று ரசிகர்கள் பலரும் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை குறித்து விமர்சிக்கின்றனர்.

ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் பாடலின் லிரிக் வீடியோ இதோ!

jigardhanda2-teaser

ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

Jigarthanda 2 Teaser: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா காம்போவில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள டீசரே வேற லெவலில் கலக்கலாக இருக்கிறது. அதிலும் இது 1975 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே கதாபாத்திரங்களின் தோற்றமும், உடையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

Also read: சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இதில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்குவது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஸ்ப்ரிங் முடி, ரெட்ரோ கால ட்ரஸ், மூக்கில் வளையம் என்று லாரன்ஸ் மாஸ்டர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.

அதேபோன்று பின்னணி இசையும் தாறுமாறாக இருக்கிறது. மேலும் பான் இந்தியாவை பாண்டியா என லாரன்ஸ் கூறும் அந்த வசனமும் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதையும் உணர்த்துகிறது. இவ்வாறாக கலகலப்பாகவும் மிரட்டலாகவும் வெளிவந்திருக்கிறது ஜிகர்தண்டா 2 டீசர்.

Also read: தீபாவளிக்கு ரேஸில் மோதிக் கொள்ளும் 3 டாப் ஹீரோக்கள்.. பரபரப்பாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அப்டேட்

அதிலும் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று ரிலீஸ் தேதியையும் அறிவித்து படகுழு எதிர்பார்ப்பை உயர்த்தி இருக்கின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் தற்போது தன்னுடைய அடுத்த வெற்றியை பதிவு செய்வதற்கு தயாராகி இருக்கிறார்.